திருவண்ணாமலை, நவ. 2- திருவண்ணாமலை நகரத்தில் 7ஆவது வார்டு பே. கோபுர முதல் தெருவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த முதலாவது தெருவில் ரேசன் கடை கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடையில் 1,600 குடும்ப அட்டைகளும், 300 முதியோர்களுக்கான குடும்ப அட்டைகளும் உள்ளன. இந்நிலையில் இந்த கடையை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் ரேசன் கடையை இடமாற்றம் செய்வதை கண்டித்து திருவண்ணாமலை பெரிய தெருவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எம்.பிரகலாதன், செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், நகர நிர்வாகிகள் கு.நீதிமாணிக்கம், குணசேகரன் உள் ளிட்ட பலர் இதில் கலந்து கொண்ட னர்.