districts

img

வீடுகளை அகற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு

திருவண்ணாமலை, பிப். 2- திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி வட்டத்திற்குட்பட்ட கீழ் சாத்தமங்கலம் ஊராட்சிமன்றம், இந்திரா நகர் கிராமத்தில் சுமார் 40 ஆண்டு காலமாக குடிசை வீடு கட்டி மக்கள் வசிக்கின்றனர். திரு வண்ணாமலை முதல் வந்தவாசி வரை சாலையை விரிவுபடுத்தும் பணிக்காக குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவு அளித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிறு பான்மை மக்கள் நல குழுவினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்டச் செயலாளர் அ.அப்துல் காதர், மாவட்டத் தலைவர் யாசர் அராபத் ஆகியோர் அந்த பகுதி மக்களை ஒன்று திரட்டி சென்று வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதில் கீழ் சாத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா மூர்த்தி, துணைத் தலைவர் சசிகலா, சமூக ஆர்வலர்கள் அமானுல்லா, ரசூல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.