திருப்பூர், டிச. 7- திருப்பூர் வடக்கு மாநகரம் எஸ்.வி.காலனியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கக் கிளை சார்பில் இளைஞர்களுக்கு இலவச சிலம்பம் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. மாமேதை அம்பேத்கரின் நினைவு நாளான ஞாயிறன்று எஸ்.வி.காலனியில் பகத்சிங் சிலம்பம் பள்ளி என்ற பெய ரில் இந்த சிலம்பம் பயிற்சி வகுப்பை வாலிபர் சங்கத்தின் வடக்கு மாநகரச் செயலாளர் கண்ணன் தொடங்கி வைத் தார். இதில், அப்பகுதி இளைஞர்கள் ஆர்வத்துடன் பங் கேற்றனர். இந்த வகுப்பானது வாரத்தில் மூன்று நாட்கள் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில், வாலிபர் சங்க வடக்கு மாநகர நிர்வாகி பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண் டார்.