districts

நூல் விலை மீண்டும் உயர்வு - தொழில் துறையினர் அதிர்ச்சி பின்னலாடை துறையை அதள பாதாளத்திற்கு தள்ளியுள்ளதாக வேதனை

திருப்பூர், ஏப்.1- பின்னலாடை துறையை அதள பாதா ளத்திற்கு தள்ளும் வகையில் தற்போது நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்த்தப் பட்டுள்ளதாக திருப்பூர் தொழில்துறையி னர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு கிலோ நூல் விலை 220 ரூபாய் முதல் 230 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு  50 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்து 330 முதல் 380 ரூபாய் வரை உயர்ந்தது. இந்த விலை உயர்வு காரணமாக வெளிநாடுகளில் இருந்து பெற்ற ஆர்டர்களை முடித்து கொடுக்கும் போது, பின்னலாடை உற்பத்தி நிறுவனங் கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் இக் கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  எனவே, நூல் விலையை குறைக்க வலியு றுத்தி திருப்பூரில் பல்வேறு போராட்டங் களில் தொழில்துறையினர் நடத்தினர். இந்நிலையில், தற்போது நடப்பு மாதத் திற்கான நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்டன. இதில் நூல் விலை கிலோ வுக்கு ரூ.30 உயர்த்தி அறிவிப்பு வெளியிட் டுள்ளன. இதன் காரணமாக 350 ரூபாய்க்கு  விற்பனையாகி வந்த நூல் தரம் வாரியாக 400 முதல் 420 ரூபாய் வரை விலை உயர்ந்துள் ளது. இதனால், திருப்பூர் தொழில் துறை யினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்தா கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏற்றுமதியாளர் சங்க தலை வர் ராஜா சண்முகம் கூறுகையில், மாதந் தோறும் அதிகரித்துவரும் நூல் விலையா னது பின்னலாடை துறையை வீழ்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வதாக உள் ளது. நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைத் துக் கொண்டே வருகிறோம். இதனிடையே தற்போது 30 ரூபாய் நூல் விலை அதிகரித் திருப்பது பின்னலாடை துறையை மேலும் அதால பாதாளத்திற்கு கொண்டு சென்றுள் ளது.எனவே, ஏப்.4 ஆம் தேதி அனைத்து பின்னலாடை துறையினர் சார்பில் ஒன்றிய அமைச்சரை சந்தித்து நூல் விலையை கட்டுப்படுத்தக்கோரி பேச இருக்கிறோம். மேலும், அதிகரித்து வரும் நூல் விலை உயர்வால் ஆர்டர்கள் பெறுவதிலும், பெற்ற ஆர்டர்களை முடிப்பதில் சிக்கல்கள் நிலவி வருகிறது. பின்னலாடை துறையை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல நூல்களின் விலையை கட்டுப்பாட் டில் வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும், எனவே, மத்திய அரசு உடனடி யாக இதனை பரிசீலனை செய்ய வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.