districts

img

அவிநாசியில் இரண்டாவது நாளாக சிறுத்தையை பிடிக்கும் பணி தோல்வி

அவிநாசி அருகே பாப்பாங்குளத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்கும் பணி இரண்டாவது நாளாக தோல்வியில் முடிந்துள்ளது.

அவிநாசி ஒன்றியம் பாப்பாங்குளத்தில் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் திங்களன்று தோட்டத்து உரிமையாளர் மற்றும் தொழிலாளி ஆகியோர் தோட்டத்திற்குள் உள்ளே சென்றபோது சிறுத்தை இருவரையும் தாக்கியது. இவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து தகவலறிந்த வனத்துறையினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத்துறை சிறுத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாலை நேரத்தில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுவந்த மணிகண்டன் என்ற ஊழியரை தாக்கியது.

சிறுத்தையை பிடிக்க கோவையிலிருந்து வரவழைக்கப்பட்டு மூன்று கூண்டில் மாமிசம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மயக்க ஊசி மற்றும் சிறுத்தை பதுங்கி உள்ள இடத்தைச் சுற்றிலும் வலை அமைக்கப்பட்டு, சென்சார் வசதிகள் கொண்ட ட்ரோன் கேமரா 12 பொருத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திடீரென சிறுத்தை வேறு இடத்திற்கு சென்று விட்டதாக வனத்துறையினர் கூறியுள்ளனர். எனவே, சிறுத்தையை பிடிக்கும் பணி இரண்டாவது நாளாக தோல்வியில் முடிந்துள்ளது.