districts

img

மருத்துவமனை கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு

திருப்பூர், ஜூன் 14- அவிநாசியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை பணிகள் குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, மு.பெ.சாமிநா தன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வெள்ளியன்று ஆய்வு செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி மற்றும் 15 வேலம்பாளையத்தில் அரசு மருத்துவ மனைகள் மற்றும் திருப்பூரில் புற்றுநோய் சிகிச்சை மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்நி லையில், வெள்ளியன்று இப்பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகி யோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட உள்ள வசதி கள் குறித்தும் அதிகாரிகளிடமிருந்து கேட்ட றிந்தனர். இதன்பின் எ.வ.வேலு செய்தியா ளர்களிடம் பேசுகையில், திருப்பூர் மாந கராட்சி தமிழகத்திலேயே புகழ்பெற்ற மாநக ராட்சியாக இருந்து வருகிறது. மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் செயல்படக்கூ டிய மருத்துவக்கல்லூரி வளாகத்தில் புற்று நோய் சிகிச்சை மையம், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு, விரைவில் பயன் பாட்டிற்கு வர உள்ளது. அவிநாசி அரசு மருத் துவமனையில் குழந்தைகளுக்கான பிரத்தி யாக கட்டிட கட்டுமானப் பணிகளும் விரை வில் பயன்பாட்டிற்கு வரும். தமிழ்நாடு - புதுச்சேரியில் 40/40 நாடாளுமன்ற தொகுதி களிலும் வெற்றி வாகை சூடவைத்த மக்க ளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக, கோவையில் சனியன்று (இன்று) முப்பெரும் விழா நடைபெற உள்ளது, என்றார். இந்நி கழ்வில், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், திமுக ஒன்றியப் பொறுப்பாளர் சிவப்பிரகாஷ், திருமுருகன் பூண்டி நகர்மன்றத் தலைவர் குமார் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.