திருப்பூர் செய்தியாளர் ரா.தீபனின் சமூகத்தின் அரசியல் பொய்கள் என்ற கவிதைத் தொகுப்பு வெளியீடு சனியன்று காலை திருப்பூர் மக்கள் மாமன்ற நூலகத்தில் நடைபெற்றது. இந்த நூலை திருப்பூர் பின்னல் புத்தக நிலைய நிலைய நிர்வாகியும், ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல். ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவருமான பா.சௌந்தரபாண்டியன் வெளியிட்டார். இதனை திருப்பூர் மக்கள் மாமன்ற அமைப்புத் தலைவர் சி.சுப்ரமணியம் பெற்றுக் கொண்டார். இதில், கேயெஸ் பத்திரிக்கையைச் சார்ந்த யுவராஜ், எழுத்தாளர் நாதன் ரகுநாதன், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.