districts

புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இளம்பெண்ணிடம் பணம் பறித்தவர் கைது

அவிநாசி, டிச.11- பெருமாநல்லூர் அருகே இளம்பெண்ணின் புகைப் படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டிய பணம் பறித்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் பகுதியில் வசித்து வரும் 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒரவர், உன்னுடைய முகத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவேன். அப்படி நான் வெளியிடாமல் இருக்க ரூ.20 ஆயிரம் தர வேண் டும் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப் பெண்,  பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித் தார்.  

இதைத்தொடர்ந்து வியாழனன்று காவல் துறையின் ஆலோசனைப்படி அந்த பெண், அந்நபரை தொடர்பு கொண்டு, பெருமாநல்லூர் பகுதிக்கு வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதை நம்பிய அந்த நபர், பெரு மாநல்லூர் நான்கு வழிச் சாலை பகுதிக்கு வந்து பெண்ணிடம் பணத்தைப் பெற்றுள்ளார். அப்போது அப்பகுதியில் மறைந்தி ருந்த காவல் துறையினர் மர்ம நபரைப் பிடித்து விசா ரணை நடத்தினர். இதில், கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறை யினர், பெண்களுக்கு எதி ராக  ஆபாச படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுதல், பணம் கேட்டு மிரட்டுதல் உள் ளிட்ட பல்வேறு பிரிவுக ளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.

;