திருப்பூர், மார்ச்.1-
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்ட மன்றத் தேர்தலில் மதவெறி பாசிச பாஜக, அடிமை அதிமுக கூட்டணியைத் தோற்கடித்து, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை வெற்றி பெறச் செய்வோம் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் சி.ராம லிங்கம் உரையாற்றினார். திருப்பூர் மாவட்டம், அனுப்பர் பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 15 வேலம்பாளையம் நகரக் குழு அலுவலகம் மற்றும் சிஐடியு பாத்திரத் தொழிலாளர் சங்கம் ஆகி யற்றை உள்ளடக்கிய தோழர் பி.ராம மூர்த்தி நினைவகம் புதுப்பிக்கப்பட்ட கட் டிடம் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற் றது. முன்னதாக அனுப்பர்பாளையம் அலுவலகக் கட்டிடம் முன்பாக கட்சி யின் செங்கொடியை வேலம்பாளையம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் ஏற்றி வைத்தார். சிஐடியு சங்கக் கொடியை பாத்திரத் தொழிலாளர் சங்கச் செயலாளர் கே.குப்புசாமி ஏற்றி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து தோழர் பி.ராமமூர்த்தி நினைவகத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் சி.ராமலிங்கம், சிஐடியு பாத்திரத் தொழி லாளர் சங்க அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.நன்மா றன், கட்சியின் நகரக்குழு அலுவல கத்தை மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், தோழர் கே.எஸ்.கருப்ப சாமி நினைவு கூட்ட அரங்கத்தை மாவட் டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், தோழர் கே.தங்கவேல் நினைவு நூல கத்தை சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் திறந்து வைத்த னர். இதையடுத்து மறைந்த தலைவர்க ளின் படங்களை விசைத்தறித் தொழிலா ளர் சம்மேளன மாநிலத் தலைவர் பி. முத்துசாமி, புதுப்பிக்கப்பட்ட அலுவல கக் கட்டிடக் கல்வெட்டை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜ கோபால் ஆகியோர் திறந்து வைத்த னர்.
இதைத் தொடர்ந்து கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் முன்களப் பணியாளர்களாக உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய தூய்மைப் பணி யாளர்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது. அத்துடன் கொரோனா காலத் தில் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு உதவி செய்த குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளுக்கும், நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பொதுக் கூட்டம் தலைவர்களின் நினைவகங்களின் திறப்பு விழாவைத் தொடர்ந்து கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அருகே வேலம்பாளையம் சாலையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செய லாளர் வி.பி.சுப்பிரமணியம் தலைமை யில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
பாத்திரத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஏ.ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் சி.ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ என்.நன்மாறன் ஆகி யோர், வரக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தலில், பாஜக மதவெறி பாசிச அபாயத்தையும், அடிமை அதிமுகவை யும் தடுத்து நிறுத்தி தோற்கடிக்க மதச் சார்பற்ற ஜனநாயக சக்திகளை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அறை கூவல் விடுத்தனர்.
இதில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், சிஐ டியு மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் ச.நந்தகோபால், மாதர் சங்க நகரச் செயலாளர் ஆர்.கவிதா, வாலிபர் சங்க நகரச் செயலாளர் கே. ஹனிபா, மாணவர் சங்க நகரச் செயலா ளர் எஸ்.ஹரி உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். முன்னதாக, உடுமலை துரைய ரசன் குழுவினரின் பாடலும், திருப்பூர் தப்பாட்டக் கலைக்குழு இளைஞர்க ளின் தப்பாட்டம் நிகழ்ச்சியும் பார்வையா ளர்களை வெகுவாக ஈர்த்தன. இக்கூட் டத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
சிபிஎம் கட்சிக்கு இடம் வழங்கியவருக்கு பாராட்டு
இந்த நிகழ்வுக்கு முன்னதாக தண்ணீர் பந்தல் பகுதியில் முத்துசாமி என்பவர் தனது சொந்த இடத்தில் சொந்த செலவில் கட்டிக் கொடுத்த மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை கட்டி டமான தோழர் என்.ஆறுமுகம் நினைவகம் திறப்பு விழா நடைபெற்றது. கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் இந்த கட்டிடத்தைத் திறந்து வைத் தார். தண்ணீர்பந்தல் கிளைச் செயலாளர் அ.உமாநாத் தலைமை வகிக்க, என்.குபேந் திரன் வரவேற்புரையாற்றினார். அத்துடன் கட்சிக்கு இடமும் வழங்கி, கட்டிடமும் சொந்த செலவில் கட்டிக் கொடுத்த முத்துசாமிக்கு மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் சி.ராமலிங்கம் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கிளைப் பெயர்ப் பலகையை மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ் திறந்து வைக்க, தலைவர்கள் படங்களை சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ், வேலம்பாளையம் கட்சி நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் ஆகியோர் திறந்து வைத்தனர். முன்னதாக, வேலம்பாளையம் முதலாவது மண்டல அலுவலகம் முன்பாக சிஐ டியு ஊரக வளர்ச்சித் துறை உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் பெயர்ப் பலகையை என்.நன்மாறன் திறந்து வைத்தார்.