districts

img

தில்லி போராட்டத்திற்கு இடதுசாரிகள் ஆதரவு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இடதுசாரி கட்சிகள் சார்பில் திரூப்பூர், தாராபுரம் அண்ணா சாலை முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் தாலூகா செயலார் என்.கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ஆர்.வெங்கட்ராமன், சிஐடியு நிர்வாகிகள் பொன்னுச்சாமி, மேகவர்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ரகுபதி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைதாகினர்.

;