districts

img

குடிநீர் தொட்டியை சீரமைத்து தரக்கோரி மனு

திருப்பூர், டிச.31 - குன்னத்தூர் பொன்காளியம்மன் நகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி தலை மையில் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் பொன்காளியம்மன் நகர் பகுதியில் இருக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்கும் சின் டெக்ஸ் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளதை மாற்றித் தர வேண்டும்.  அனைத்து வீதிகளுக்கும் தார் சாலை அமைக்க வேண்டும். பொதுப் பாதையை சீரமைப்பு செய்து தர வேண்டும்  என வலியுறுத்தி குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி கமிட்டி உறுப்பினர் சின்னசாமி, பொது தொழிலாளர்கள் சங்க தலைவர் பன் னீர்செல்வம், சாவித்திரி  ஆகியோர் தலைமையில் குடியி ருப்பு பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட குன்னத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர், விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

;