districts

செல்போன் கொள்ளையன் கைது

அவிநாசி, டிச.11- பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையத்தில் செல்போன்களை திருடிய வரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையம் ரவுண் டானா பகுதியில் செல் போன் கடை வைத்து நடத்தி வருபவர் பீர் முகமது (25). இவரது கடைக்கு புத னன்று வந்த நபர் ஒருவர் மேசை மீது வைத்திருந்த செல்போன்களை திருடிச் சென்றுள்ளார். இது குறித்து பீர் முகமது காவல் நிலையத்தில் அளித்த புகா ரில், காவல் துறையினர் கண் காணிப்பு கேமரா பதிவு களைக் கொண்டு தீவிர விசா ரணை மேற்கொண்டு வந்த னர்.  

இந்நிலையில், திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள மற்றொரு செல்போன் விற் பனை கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் கொள்ளைய டிக்கப்பட்ட செல்போன் களை விற்க முயன்றுள்ளார். இதையறிந்த கடையின் உரிமையாளர் அளித்த தக வலின் பேரில், காவல் துறையினர் விரைந்து அந் நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் கணக்கம்பாளையத்தில் உள்ள செட்டியார் காம்ப வுண்டில் வசித்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அசோக் குமார் (22) என்பது தெரியவந்தது. இதைய டுத்து பெருமாநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அசோக் குமாரை கைது செய்தனர்.

;