திருப்பூர், டிச.28- திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் ஜன. 3 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விற்பனை இயக்கத்தில் வாங்கப் படும் புத்தகங்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப் படுகிறது. 17ஆவது புத்தகத் திருவிழாவை வரவேற்புக் குழுத் தலைவர் மோகன் கார்த்திக் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். திருப்பூர் புத்தகத் திருவிழா முன்னாள் தலைவர்கள் எம்பரர் வி.பொன்னுசாமி, எம்.ஜீவானந்தம், யுனிவர்சல் பழனிசாமி, பின்னல் டிரஸ்ட் நிர்வாகிகள் கே.காமராஜ், ஆர்.ஈஸ்வரன், அ.நிசார் அகமது மற்றும் செ.முத்துக்கண்ணன், பின்னல் புத்தகாலயம் பொறுப்பாளர் பா.சௌந்தரபாண்டியன், பி.ஆர்.கணேசன் உள்பட திர ளானோர் கலந்து கொண்டனர்.