திருப்பூர், ஜூலை 11- 20 ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்க ரை ஆலையை விவசாயிகளின் நல னைக் கருத்தில் கொண்டு, புனர மைக்க போதிய நிதி ஒதுக்க வலி யுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கத்தினர் வியாழனன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க அமராவதி கூட்டுறவு சர்க் கரை ஆலை தலைவர் எ.பால தண்டபானி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செய லாளர் செ.முத்துக்கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள், ஆர்.குமார், எம்.எம். வீரப்பன், வெ.பழனிசாமி, எஸ்.பரம சிவம், எ.ராஜகோபால், நெய்க்காரப் பட்டி எம்.கோபண்ணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று டி.ரவீந்திரன் பேசுகையில், அமரா வதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1961 இல் துவக்கப்பட்ட முதல் ஆலை ஆகும். இந்த ஆலைக்கு திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் இருந்து கரும்பு கொண்டு வரப்பட்டு, தென்னிந்தியாவில் அதிக பிழி திறன் கொண்ட ஆலையாக நாளொ ன்றுக்கு 2500 டன் வரை அரவை செய்யப்பட்டது. கடந்த 20 ஆண்டு காலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் இந்த ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்கவில்லை. பல ஆண்டுகளாக சிறிது சிறிதாக பிழிதிறன் இழந்து கடந்த ஆண்டு முற்றிலும் ஆலை இயங்காமல் நிறுத்தப்பட்டு விட்டது.
இந்த ஆலைக்கு கரும்பு வழங்கும் விவசாய நிலங்கள் கரும்பு விளைவதற்கு ஏற்ற நீர்வளம் மற்றும் நில வளம் கொண்ட பகுதியாகும். தென்னிந்தியாவில் அதிக கொள்ளளவு கொண்ட எரிசாராய ஆலை இருப்பதும் இந்த ஆலையின் சிறப்பம்சம். இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஆலை போதிய பராமரிப்பின்றி தற்போது இயக்கப் படாததால் கரும்பு விவசாயிகள், ஆலைத் தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள், விவ சாயக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் அதனைச் சார்ந்து உள்ள வர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே விவசாயி களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு முழுமையாக ஆலையை புனரமைக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரும்பு விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.