திருப்பூர், ஏப்.22- சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட பூலுவட்டி ரிங் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதை சீரமைத்துத் தர வேள் டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில்தான் பூலுவட்டி ரிங் ரோடு சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், சாலையில் மூன்று வாரங்களுக்கு முன்பு பள்ளம் உருவாகியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் போக்குவரத்து காவலர்களிடம் தெரிவித் துள்ளனர். இதையடுத்து பள்ளத்தின் முன்பு காவலர்கள் டிவைடர் வைத்துள்ளனர். மேலும் விரைவில் இந்த பள்ளம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். மூன்று வாரங்கள் ஆகியும் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது என்று பொதுமக்கள் கூறினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், திருமுரு கன் பூண்டி, பூலுவட்டி சந்திப்புகளுக்கு செல்லும் முக்கிய மான சாலை என்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். பல ஆண்டுகள் குண்டும், குழியுமாக இருந்த சாலை சமீபத்தில் தான் சீரமைக் கப்பட்டது. புதிதாக போடப்பட்ட சாலையில் பள்ளம் உருவாகி யுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படி, தரம் இல்லாத சாலை அமைத்த ஒப்பந்தாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த சாலைகளில் போதுமான தெரு விளக்குகள் இல்லை. கூடுதல் தெரு விளக்குகள் அமைத்து விரைவில் இந்த சாலையை அரசு சீரமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.