திருநெல்வேலி ,மார்ச் 3- பாபநாசம் அகஸ்தியர் அருவியில் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து அங்கு 4-ந் தேதி (சனிக் கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனு மதிக்கப்படுகின்றனர். பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது. இங்கு ஆண்டு முழு வதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும், ஆன்மிக அருவியாக திகழ்வதாலும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ஆனந்தமாக குளித்து செல் வார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான (2023) வன உயிரின கணக்கெடுப்பு பணிகள் காரணமாக, கடந்த மாதம் 8-ந் தேதியில் இருந்து அகஸ்தியர் அருவி உள்ளிட்ட பாபநாசம் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்க ளுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதற்கிடையே அகஸ்தியர் அருவியில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக குளிப்பதற்கு இடையே யுள்ள தடுப்புச்சுவர், தடாகப்பகுதி, அருவியை சுற்றியுள்ள தடுப்பு கம்பிகள், அருவிக்கு செல்லும் வழியில் உள்ள தடுப்பு கம்பிகள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடை பெற்றது. இதையடுத்து அங்கு4-ந் தேதி முதல் சுற்றுலா பய ணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதாக வனத்துறை யினர் அறிவித்துள்ளனர்.