திருநெல்வேலி, நவ.13- ஒடிசா மாநிலம் பாரதீப்பிலிருந்து 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் நெல்லைக்கு உரங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை வந்து இறங்கியது. டி.ஏ.பி உரங்கள் 1013 டன், காம்பளக்ஸ்-318.75 டன் உரங்கள் வந்தது. இந்த உர மூடைகள் சரக்கு லாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது, அங்கிருந்து உரங்கள் உரக்கடைகளுக்கு அனுப்பி வைக் கப்பட உள்ளன.