கந்தர்வகோட்டை, மார்ச் 23 - புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் வீரடிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் சார்பில் உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வேதநாயகி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் மு.முத்துக்குமார் துளிர் திறனறிவுத் தேர்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, உலக தண்ணீர் தினம் குறித்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் ரகமதுல்லா வாழ்த்திப் பேசி னார். முன்னதாக ஆசிரியர் கண்ணன் வர வேற்க, ஆசிரியர் ஹெலன்தனமேரி நன்றி கூறினார். பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாரம், கரம்பயம் கிராமத்தில் ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில், ஊராட்சி மன்றத் தலைவர் மேனகா ஆனந்த் குமார் ஒத்துழைப்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. ஆர்.வி.எஸ் வேளாண்மைக் கல்லூரி, பட்டுக்கோட்டை பிரிவு தலைவர் மா.வசந்தகுமார் தலைமை வகித்தார். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மணிமாறன் முன்னிலை வகித்தார். பேரணியில், ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் கிராம மக்களிடம் தண்ணீர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பட்டுக் கோட்டை வேளாண்மை துறை சார்பாக, அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் கலந்து கொண்டார்.