districts

போக்குவரத்து செலவினங்களை வழங்காமல் முறைகேட்டில் ஈடுபடும் பொறியாளர் மீது நடவடிக்கை எடுத்திடுக!

திருச்சிராப்பள்ளி, மார்ச் 9 - சாலைப் பணியாளர்களுக்கு போக்கு வரத்து செலவினங்களை வழங்காமல் முறை கேடு செய்யும் உதவி கோட்ட பொறியாளர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுக் கணக்கில் கருவி, தண்டவாளங்கள் வழங்கா மல் செலவினங்களை மட்டும் மேற்கொண்ட முறைகேடு குறித்து விசாரணை செய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழி காட்டு நெறிமுறைகளின்படி மருங்காபுரி பிரிவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு எச்.ஆர்.ஏ, வீட்டு வாடகை படி உயர்த்தி வழங்க  வேண்டும். பொது சேமநல நிதி முன் பணம் பெறுவதற்கு கையூட்டு பெறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பணியாளர்களை பணி தளத்தில்  தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளால்  அனுதினமும் பேசி, மனரீதியில் துன்புறுத்தி யும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வரும் சாலை ஆய்வாளர் அன்பழகன் மீது  துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில்  மணப்பாறை நெடுஞ்சாலைத்துறை உதவி  கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில்  தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர்  ஜீவானந்தம் தலைமை வகித்தார். உட்கோட்ட  தலைவர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் மகேந்தி ரன் துவக்க உரையாற்றினார். கோரிக்கை களை விளக்கி கோட்ட செயலாளர் இளங்கோ வன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி, மாவட்ட  செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட பொருளா ளர் சுந்தர்ராஜன், மாநில துணைத் தலைவர்  பெரியசாமி ஆகியோர் பேசினர். சங்க மாநில  தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரை யாற்றினார். மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் நன்றி கூறினார்.