districts

img

வயல்களில் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள் சீரமைக்கப்படுமா

பாபநாசம், மே 13 -

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே குலசே கரநல்லூரில் இருந்து கொள் ளிடக்கரைக்கு, தெற்குராஜன் வாய்க்காலுக்கு செல்கிற சாலையின் வடபுறம் திரி சங்கு, இளங்கோ ஆகியோரது  நிலம் உள்ளது. இங்கு செல்கிற மின்கம்பம் மற்றும் மின் கம்பிகள் மிகவும் ஆபத்தான நிலையில் சாய்ந்து, கம்பிகள் தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கின்றன. இதனால் விவசாயிகள், கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.  

   இதேபோன்று வேட்டமங்கலம், காமாட்சிபுரம் பகுதிகளி லும் பல இடங்களில் மின் கம்பி தடங்கள் மிகவும் தாழ்வாக  செல்கின்றன. விபத்து நேரும் முன்பு இதைச் சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.