தஞ்சாவூர், மே 15 - பேராவூரணி அருகே, பின்னவாசல் புதுக்குடியிருப்பு பகுதியில், நீண்ட காலமாக குடியிருந்து வரும் அடித்தட்டு மக்கள், தங்களுக்கு அரசு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா, பின்னவாசல் ஊராட்சி புதுக் குடியிருப்பு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பேரா வூரணியில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில், சித்தாதிக்காடு கடைவீதியில் இருந்து, சுமார் 2 கி. மீட்டர் தூரத்தில் வலதுபுறமாக இந்த குடி யிருப்பு அமைந்துள்ளது. 57 ஏக்கர் 64 சென்ட் இடம் கொண்ட அரசு புறம்போக்கு இடத்தில், 60 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக் கான குடும்பங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள 36 குடும்பங்களுக்கு, கடந்த 30 வருடங்களுக்கு முன்பு தமிழக அரசு வீட்டுமனைப் பட்டா வழங்கி யுள்ளது. ஆனால் 65-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை வீட்டு மனைப் பட்டா வழங்கப்படவில்லை.
அன்றாடம் உழைக்கும் விவசா யத் தொழிலாளர்கள், கூலித் தொழி லாளிகளான இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சிறிய கொட்டகையிலும், ஆஸ் பெஸ்டாஸ் சீட்டு அமைத்தும், சிறிய அள விலான ஹாலோபிளாக் வீடு கட்டி யும் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதி யில், ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தண்ணீர்த் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த மே 6 ஆம் தேதி நடத்தப்பட்ட, வீடற்ற அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். நீர்நிலை புறம் போக்கு, நீர்வழிக் கரையோரம், குளக்கரை, சாலை ஓரங்களில் பல ஆண்டுகளாகக் குடியிருப்போரை அங்கிருந்து அப்புறப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து சமய நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என நடத்திய மனு கொடுக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு மனைப்பட்டா கேட்டு மனு அளித்தனர். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் கள் ஏ.வி.குமாரசாமி, ரெங்கசாமி, சிதம்பரம், ராஜா முகமது, ஜகுபர்அலி மற்றும் அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்க நிர்வாகிகள் சனிக் கிழமை அப்பகுதியை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந் தனர். அப்போது. அதே பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம், கருப்பையா, பத்மா, சத்தியா, சுப்புலட்சுமி ஆகியோர் சிபிஎம் நிர்வாகிகளிடம் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்க உதவிடு மாறு கண்ணீருடன் தெரிவித்தனர்.
பொதுமக்களை சந்தித்து குறை களை கேட்டறிந்த பின்னர், சிபிஎம் ஒன்றி யக் குழு உறுப்பினர் ஏ.வி.குமார சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட குடும் பங்களில், 36 குடும்பத்திற்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 65 குடும்பங்கள் வீட்டுமனைப் பட்டா இல்லாமல் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள அங்கன்வாடி கட்டிடம் புதிதாகக் கட்டப்பட்டு, இதுவரை திறக்க படாமல் உள்ளது. சில வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பல வீடுகளில் மின் இணைப்பு இல்லாமல் உள்ளனர். கூலித் தொழிலாளிகள், விவ சாயக் கூலித் தொழிலாளர்கள் என இப்பகுதியில் வசிப்போர் அனைவரும் அடித்தட்டு மக்களாவர். இங்கு குடியிருப்போருக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் உள்ளது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அடித் தட்டு மக்களை நேரடியாகச் சென்று சந்தித்து, அவர்களுக்கு வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருகிறார். மாவட்டம் முழு வதும் உள்ள நரிக்குறவர் மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில், பார்வையிட்டு அவர்க ளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளார்.
இதேபோல், மாவட்ட ஆட்சியர் இப்பகுதிக்கு வந்து மக்களின் குறை களை கேட்டறிந்து, இவர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள பிள்ளைகள் படிப்பதற்காக பின்ன வாசல், பேராவூரணி பகுதிக்கு சென்று வருகின்றனர். எனவே, இவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா உட்பட மற்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர தமிழக அரசு முன்வர வேண்டும். அரசு சார்பில் வீடு கட்டித் தர வேண்டும்” என்றார்.