மயிலாடுதுறை நவ.09- மயிலாடுதுறை மாவட் டம், செம்பனார்கோவில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்தம் கட்டிடம் எப்போது கட்டப்படும் என பொதுமக் கள் கேள்வி எழுப்பியுள்ளனர். செம்பனார்கோவில் அருகே பரசலூர் ஊராட்சி அருகில் பல ஆண்டுகளாக சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வந்தது. இதனால் தரங்கம்பாடி, ஆயப்பாடி, மன்னம்பந்தல், திருக்கடை யூர், ஆக்கூர், நல்லாடை, சங் கரன்பந்தல், திருவிளையாட் டம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த மக் கள் இந்த சார் பதிவாளர் அலு வலகத்தில் நிலம் பத்திரப்பதிவு, பதிவு திருமணங்கள் உள் ளிட்ட பல்வேறு பணிகளுக் காக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்ட பட்ட சார்பதிவாளர் அலுவல கம் சேதமடைந்து காணப்பட் டது மழைக் காலங்களில் தண்ணீர் கசிந்து வந்தது. இத னால் அலுவலகத்தில் பணி யாற்றும் ஊழியர்கள் சிரமப் பட்டு வந்தனர். இந் நிலையில் சார்பதிவா ளர் அலுவலகம் அதே இடத் தில் கட்டுவதற்காக சேதம டைந்த கட்டடத்தை அகற்றப் பட்டது. ஆனால் இன்னும் புதிய கட்டிடம் கட்டுவதற் கான பணிகள் தொடங்கப்பட வில்லை. இதனால் தற்போது சார்பதிவாளர் அலுவலகம் ஒரு வருடத்திற்கு மேலாக மேல பரசலூர் பகுதியில் ஆதீ னத்திற்கு சொந்தமான கோயில் வளாகத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல் பட்டு வருகிறது. இந்த அலு வலக கட்டடம் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் பல்வேறு பணி களுக்காக செல்லும் பொது மக்கள் போக்குவரத்து வசதி கள் இல்லாததால் சிரமப் பட்டு வருகின்றனர். பழைய இடத்திலேயே புதிய சார் பதி வாளர் அலுவலக கட்டடத்தை விரைந்து கட்டித்தர மாவட்ட நிர்வாகம் விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.