districts

img

சிறப்பாக பணிபுரிந்த 4 பேருக்கு பாராட்டு

திருவாரூர், மே 8-  

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

   கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய  குடும்ப அட்டை ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன்,  வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 253 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த னர்.  

   பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களி டம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி உட னடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தர விட்டார்.

  இதனைத்தொடர்ந்து, கூட்டுறவு சங்கங்களின் சார்பில் நியாய விலைக் கடைகளில் சிறப்பாகப் பணி புரிந்த 4 பேருக்கு ரொக்கப் பரிசுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.