districts

img

திருமண வரவேற்பு விழா

திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர். பி.தங்கையன் மகள் ஆசிரியை த.லீலாவதி-சி.சரவணன் இல்ல திருமண வரவேற்பு விழா வெள்ளியன்று  மயிலாடுதுறையில் நடைபெற்றது.  கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் வரவேற்றார். நாகை மாவட்ட செயலாளர் வி.மாரிமுத்து, தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன்,கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்தியக்குழு உறுப்பினர்கள் பெ.சண்முகம், உ.வாசுகி, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை.மாலி,தமிழ்நாடு தாட்கோ தலைவரும், முன்னாள் அமைச்சருமான உ.மதிவாணன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம்,  விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், தீண்டாமை ஒழிப்பு முண்ணனி துணைப்பொதுசெயலாளர் பி.சுகந்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.சுந்தர்ராஜன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு மற்றும் பல்வேறு சங்கங்களின் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.