சீர்காழி, டிச.19- கொள்ளிடம் அருகே கடைக்கண் விநாயகநல்லூர் கிராமத்தில் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தை உடன டியாக அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டம் அருகே கடைக்கண் விநாயக நல்லூர் கிராமத்தில் ரேசன் கடை கட்டி டம் உள்ளது. ஆச்சாள்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த பழைய கட்டி டத்தில் ரேசன் கடை இயங்கி வருகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தின் உள்பகுதியில் மேற்கூரை காரை பெயர் ந்து கீழே விழுந்துள்ளது. நான்கு சுவர் பகுதிகளிலும் வெடிப்பு விழுந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழை பெய்யும்போது கட்டிடத்தின் மேற்கூரை உள் பகுதியில் தண்ணீர் கசிந்து உள்ளே இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் அத்தி யாவசிய பொருட்கள் சேதம் ஆகும் நிலை உள்ளது. இதனால் இந்த கட்டிடத்தின் மேல்ப குதியில் பாலிதீன் பேப்பர் போட்டு மூடப்பட்டுள்ளது. இருந்தும் இந்த ரேசன் கடை கட்டிடம் எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கடையில்தான் அப்பகுதி கிராம மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி செல்கின்றனர். பாதுகாப்பற்ற நிலையில் இயங்கி வரும் இந்த ரேசன் கடை கட்டிடத்தை உடனடியாக இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.