districts

நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை அனைத்து பேரூராட்சிகளிலும் விரிவுபடுத்த வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, அக்.15 - அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்க மாவட்ட சிறப்பு பேரவை ஞாயிறன்று திருச்சி வெண்மணி இல்லத்தில்  நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலை வர் சந்திரன் தலைமை வகித்தார். அகில இந்திய துணைத் தலைவர் லாசர், மாநிலச்  செயலாளர் சங்கர், மாநிலப் பொருளாளர் பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் சுப்ர மணியன் ஆகியோர் பேசினர். காவிரி நீர் பிரச்சனையில் ஒன்றிய அர சாங்கம் தலையிட்டு கர்நாடக அரசு தமிழ் நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும். கர்நாடக மாநி லத்தில் உள்ள காவிரி அணைகளை மத்திய  நீர்ப்பாசன துறை பொறுப்பில் எடுத்து,  மாதந்தோறும் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய  நீரை கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்பு சட்டத்தில், நான்கு மாதங்களாக வழங்கப்பட வேண்டிய ஊதியம் ரூ.2,100 கோடியை ஒன்றிய அரசு உடனே கொடுக்க வேண்டும். நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.1000 கோடி  நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து பேரூராட்சி களிலும் விரிவுபடுத்த வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாவட்ட துணைத் தலைவர் வீரவிஜ யன், துணைச் செயலாளர் செல்வம் மற்றும்  மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக துணைச் செயலா ளர் முத்துக்குமார் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.