அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றிய மாநாடு நல்லூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் மாதர் சங்க மாவட்ட நிர்வாகிகள் பி.கோமதி, சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய தலைவராக ஜெயலெட்சுமி, செயலாளராக சுலோச்சனா, பொருளாளராக விஜயா, துணைத் தலைவராக பைரவி, துணை செயலாளராக ஜானகி ஆகியோரை உள்ளடக்கிய 13 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.