மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடவாசல் வடக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் பி.செல்வராஜின் தாயார் பெ.அஞ்சலையம்மாள் படத்திறப்பு நிகழ்வு திருவாரூர் மாவட்டம் திருவிழிமிழலை ஊராட்சி, கடுங்கடி தெருவில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் கே.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், அம்மையாரின் உருவப்படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.