மயிலாடுதுறை, ஜூலை 20-
மயிலாடுதுறை மாவட்டம் ,தரங்கம்பாடி வட்டம் திருக் களாச்சேரி ஊராட்சியில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இடுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
வேளாண்மை இணை இயக்குநர் சேகர் தலைமை வகித்தார்.பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் விவசாயிக்கு மானிய விலையில் விவசாய உரங்கள், நெல் விதைகள் மற்றும் விவசாய கருவிகள் வழங்கினார்.
தஞ்சாவூர் மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், சித்திக், மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றியச் செய லாளர்கள் அப்துல் மாலிக், அமுர்த விஜயகுமார், வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன், ஊராட்சி மன்றத் தலைவர் பைலட் உள்ளிட்ட வேளாண் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.