காவல்துறையினருக்கு விடுமுறை
தஞ்சாவூர், அக்.11 - தஞ்சாவூர் சரகத்தில் இது வரை மொத்தம் 883 காவல் துறையினருக்கு வாராந்திர ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். திமுக அரசு பதவிக்கு வந்த பிறகு, காவல்துறை யினருக்கு வார விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித் துள்ளது. இதையடுத்து, தமிழக காவல்துறை இயக்கு னர், காவல்துறை தலைவர் உத்தரவின்படியும், காவல் துறை துணைத் தலைவர் அறிவுரையின்படி, தஞ்சா வூர் காவல் சரகத்தில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலா டுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையின ருக்கு செப்டம்பர் மாதத்தில் மட்டும் வாராந்திர ஓய்வு 558 நபர்களுக்கும், பிறந்தநாள் கொண்டாட 56 நபர்களுக் கும், திருமண நாள் கொண்டாட 210 நபர்களுக் கும், குடும்பத்தினர் பிறந்த நாள் கொண்டாட 29 நபர் என மொத்தம் 883 காவல் துறையினருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக தஞ்சை மாவட்டத்தில் 228 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 113 பேருக் கும், நாகப்பட்டினம் மாவத் டத்தில் 410 பேருக்கும், மயி லாடுதுறை மாவட்டத்தில் 132 பேருக்கும் என மொத்தம் 883 பேருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இலவச கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர பெண் பயணிகள் கோரிக்கை
பொன்னமராவதி, அக். 11 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்கள் பயன்படுத்துவதற்கு இலவச கழிப்பறை மற்றும் கட்டண கழிப்பறை பேருந்து நிலையத்திற் குள் உள்ளது. இந்த கட்டணக் கழிப்பறை இரவு 9 மணி வரை இயங்குகிறது. இரவு மற்றும் அதிகாலையில் பேருந்து நிலையம் வரும் பெண் பயணிகளுக்கு இலவச கழிப்பறை பயனுள்ளதாக இருந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இலவச கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் நிலையில், பெண் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பொன்னமராவதி பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இலவச கழிப்பறையை சுகாதாரமான முறையில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பெண் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அக்.17 அரசு ஓய்வூதியர் சங்க மாநாடு வரவேற்பு குழு அமைப்பு
கும்பகோணம், அக்.11- தஞ்சை மாவட்டம் அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட மாநாடு அக்டோபர் 17 அன்று கும்பகோணம் கோவிந் தன் மகாலில் நடைபெறுகிறது. அதனையொட்டி மாநாட்டிற்கான வரவேற்புக் அமைப்புக் குழு கூட்டம் கும்பகோணம் சிஐடியு அலுவலகத்தில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் இரா.கலியமூர்த்தி தலைமை ஏற்றார். மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜகோபாலன், மாவட்டப் பேரவையை கும்பகோணத்தில் நடத்திட அனைத்து தொழிற் சங்கங்கள், ஓய்வூதியர் அமைப்புகள் கொண்ட வரவேற்புக் குழுவுக்கான முன்மொழிவை வைத்தார். அப்போது மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவராக சிஐடியு தஞ்சை மாவட்ட பொருளாளர் ம.கண்ணன், துணைத் தலைவர்களாக பழ.அன்புமணி. துரைராஜ் (ஓய்வூதியர் சங்கம்), எஸ்.சுப்பிரமணி (காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்), செயலாளராக ஆர்.ராஜகோபாலன் (ஓய்வு சங்கம்), இணை செயலாளர்களாக அ.விசுவேஸ்வரன் (அரசு ஊழியர் சங்கம்), தாமோதரன் (அரசுப் போக்குவரத்து ஓய்வூதியர் நல சங்கம்) பொருளாளராக கே.பக்கிரிசாமி (ஓய்வூதியர் சங்கம்) ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கிளை துவக்க விழா
பாபநாசம், அக்.11 - தமிழ்நாடு சாலை போக்குவரத்து சங்கத்தின் அய்யம் பேட்டை நியூ டவுன் கிளை 13 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியத் தலைவர் எம்.அஷ்ரப் அலி தலைமை வகித்தார். கௌரவ தலைவர் பி.எம்.காதர் ஹுசேன் சங்க கொடியேற்றினார். சங்க தலைவர் ஆர்.பெல் மணிகண்டன் பெயர் பலகையை திறந்து வைத்தார். ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சங்கர், அய்யம்பேட்டை சிபிஎம் நகர செயலாளர் ஏ.ஆர். சேக்அலாவுதீன், விவசாய சங்கம் வி.முரளிதரன், ஆர்.தங்கராசு உள்பட பங்கேற்றனர். ஒன்றிய பொருளாளர் எஸ்.கோபிநாதன் நன்றி கூறினார்.
திருவாரூர்: மழையளவு
திருவாரூர், அக். 11 - வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக திரு வாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் கனமழை பெய்கிறது. திங்கட்கிழமை திரு வாரூரில் 24.4 மி.மீ, குடவாசலில் 5.4 மி.மீ, வலங்கைமானில் 3.2 மி.மீ, மன்னார்குடியில் 72 மி.மீ, நீடாமங்கலத்தில் 3.2 மி.மீ என 45.8 மி.மீ அளவு மழை பெய்தது. இதன் சராசரி 5.08 மி.மீ. நன்னிலம் 11.4 மி.மீ, பாண்டவை ஆறு 14.2 மி.மீ, முத்துப்பேட்டை 58.2 மி.மீ, திருத்துறைப்பூண்டி 42.8 மி.மீ என மொத்தம் 234.8 மி.மீ மழை பெய்தது. இதன் சராசரி அளவு 26.08 மி.மீ.
சிபிஎம் கிளை மாநாடு
பாபநாசம், அக்.10 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகர கிளை மாநாடு கட்சி அலுவலகத்தில் நடை பெற்றது. மாநாட்டிற்கு ராமதாஸ் தலைமை வகித்தார். மூத்த உறுப்பினர் சிவ.காவிரிசெல்வன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் என்.சிவகுரு, ஒன்றி யச் செயலாளர் பி.எம்.காதர் ஹீசேன், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் நகர கிளை செயலாளராக வி.முரளி தரன் தேர்வு செய்யப்பட்டார்.