districts

img

போக்குவரத்து கழக ஊழியர்கள் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்

மன்னார்குடி, ஜூலை 26 - போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த அரசு நிதி வழங்க வேண்டும், காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். காண்ட்ராக்ட்-தனியார்மயம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இயக்கத்திற்கு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க நாகை  மண்டல மத்திய சங்க துணைச் செயலாளர் எம்.கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரகுபதி, இணைப்பு சங்க தலைவர்கள் கலந்து கொண்ட னர். மன்னார்குடி தேரடி பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள்  கூடும் இடங்களில்  பிரச்சாரம் நடைபெற்றது. தஞ்சாவூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையத்தில், பேருந்து ஓட்டுநர்கள்-நடத்து நர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், கடை வியாபா ரிகளை சந்தித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கினர். சிஐடியு  போக்குவரத்து ஊழியர் சங்க கிளைத் தலைவர் சி.பிரகாஷ்  தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ஜி.ரகு, மத்திய சங்க  துணைச் செயலாளர் என்.நவநீதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை  அரசு போக்குவரத்து கழகத்தை பாதுகாக்க வலியு றுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேள னம் சார்பில் மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம் மயிலாடு துறையில் நடைபெற்றது. அமைப்பின் மண்டல துணைச்  செயலாளர் என்.பாரதிமோகன் தலைமையில் மயிலாடு துறை பழைய, புதிய பேருந்து நிலையங்களில் பொதுமக்க ளுக்கு பிரசுரம் வழங்கி நடைபெற்ற பிரச்சாரத்தில் சிஐடியு  மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன், மாவட்டப் பொருளா ளர் ஆர்.ராமானுஜம், மண்டல இணை பொதுச் செயலாளர்  ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.