districts

தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தஞ்சாவூர், டிச. 5 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தீய ணைப்பு மற்றும் மீட்புப் பணி கள் துறை சார்பில், தன்னார் வலர்களுக்கு தீத்தடுப்பு மற்றும் பேரிடர் மேலா ண்மை குறித்து சனிக்கிழமை  பயிற்சி அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை  மாவட்ட அலுவலர் மனோ பிரசன்னா உத்தரவுப்படி, பேராவூரணி தீயணைப்பு நிலைய அலுவலர் ஐ. செந்தூர்பாண்டியன் தலை மையில் 10 தன்னார்வலர்க ளுக்கு, தீ விபத்து ஏற்படும் போது, எவ்வாறு செயல்படுவது, வெள்ளக் காலங்களில் மீட்புப் பணியில்  ஈடுபடுவது, விபத்தில் சிக்கிய வர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து அடிப் படை பயிற்சிகள் அளிக்கப் பட்டன.

;