districts

img

குமரியில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் காற்றாடி திருவிழா

நாகர்கோவில், ஆக.5-

    கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சித் துறையின் சார்பில் 3 நாட்கள் நடைபெற வுள்ள மாபெரும் சர்வதேச அளவிலான காற்றாடித் திரு விழாவினை பால் வளத் துறை துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலை மையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (ஆக.4) துவக்கி வைத்தார்.

   இதில், புலி உருவங்க ளுடன் கூடிய காற்றாடி, கார்ட்டூன் தொடர்களில் வரும் ஸ்பான்ஜ் பாப் உருவ காற்றாடி, சோட்டா பீம், டோலு-போலு, சுட்கி, பாலகணேசா, யானை, அசோக சக்கர வடிவிலான காற்றாடி என பலவித காற்றாடிகள் விண்ணில் பறக்க விடப்பட்டன. இதனை சுற்றுலா பயணி களும் மாணவ-மாணவி களும் கண்டு ரசித்தனர்.  

   உலக அளவிலான காற்றாடி திருவிழா, ஏறத்தாழ 50, 60 இடங்களில் நடைபெறுகிறது. இதில் பிரான்ஸ், இத்தாலி நாடு களில் நடப்பது தான் பெரிய திருவிழா ஆகும். கன்னியாகுமரியில் முதல் முறையாக காற்றாடி  திருவிழா நடைபெற்றுள் ்ளது. காற்றாடி திருவிழாவில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுலா பய ணிகள், அரசு அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர்.