தஞ்சாவூர், ஜூன் 22-
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜூன் 24 அன்று இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடை பெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் வெண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம் வட்டம் திருபுறம்பியம் அரசு மேல்நிலைப் பள்ளி, அதிராம்பட்டினம் துர்கா செல்லி யம்மன் திருமண மண்டபம் ஆகிய 3 இடங்களில் ஜூன் 24 அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இல வச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறஉள்ளது.
முகாமில் பொது உடல் பரிசோதனை, பல், காது, மூக்கு, தொண்டை, கண், குழந்தை நலம், பெண்கள் நலம், மகப்பேறு, பொது மருத்துவம், சித்த மருத்துவம், காச நோய் மற்றும் தோல் நோய் உள்ளிட்ட அனைத்து பரி சோதனைகளும் நடைபெறும்.
மேல் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் வழங்கப் படும். எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு மருத்துவ முகா மில் பங்கேற்று பயன்பெறலாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.