ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், உறையூரை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. அதன் பிறகு விஜயநகர பேரரசு, மராட்டிய மன்னர் கள் என பல மன்னர்களால் கோவில் கட்டுமான திருப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு ஆயிரமாண்டு பழமை யான வரலாற்றுப் பின்ன ணியை கொண்டது. இந்த கோவில் ஆசியாவிலேயே மிக உயரமான 236 அடி ராஜகோபுரத்தை கொண் டது. பல்வேறு சிறப்புகளை கொண்ட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை சுற்றி 5,6,7 ஆம் பிரகாரங்களில் பல ஆயிரம் வீடுகள், கட்டிடங்கள் பல நூறு ஆண்டு களாக உள்ளன. இவையனைத்தும் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சாமி கோவிலுக்கு சொந்தமானது என்று கூறி 326 ஏக்கர் இடத்தில் பத்திர பதிவு நிறுத்தப்பட் டுள்ளதை அறிவோம். மேற்கண்ட நிலங்களை, வீடுகளை, கட்டிடங்களை விற்க, வாங்க, அடமானம் பெற, உயில்எழுதி கொடுக்க, வங்கிகளில் கடன் பெற முடியாத நிலை நீண்ட கால மாக உள்ளது. இந்நிலையில் தமிழக முன்னாள் முதல் வர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது பல தலை முறைகளாக வசித்து வரும் ஸ்ரீரங்கம் மக்களின் அடிமனை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தார்.அதன் பிறகு 12 ஆண்டுகள் கடந்த பின்பும் அடிமனை பிரச்சனை தீர்க்கப்படவில்லை. மேலும் தமிழக அரசின் உரிய கவன மின்மை காரணமாக தற்போது நிலமை மேலும் சிக்கலாகி உள்ளது.
குடியிருப்போரை அச்சுறுத்தும் இணை ஆணையரின் நோட்டீஸ்
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் இருந்த வழக்கில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் 329.91 ஏக்கர் நிலம் முழுவதும் ஸ்ரீரங்கம் கோவி லுக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப் பட்டது. இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த கோவிலின் அறநிலையத் துறை இணை ஆணையர் களத்தில் இறங்கி பல்லாயிரக்கணக்கான குடியிருப்புவாசி களை அச்சுறுத்தும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ஸ்ரீரங்கம் வெள்ளி திருமுத்தம் கிராமத்தை சேர்ந்த டி.டி 1027 இல் உள்ள ஏ,பி,சி பிளாக்குகளில் உள்ள 329.91 ஏக்கர் நிலம் கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திரவீதி, தெற்கு உத்திர வீதி, வடக்கு உத்திரவீதி மற்றும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு சித்திரை வீதிகள், அடையவளஞ்சான் வீதிகள், சாந்தார வீதி, வ.உ.சி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவி லுக்கு பாத்தியப்பட்ட இடம் என்றும், இந்த இடங்கள் முழுவதும் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பாக கூறி மதுரை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே மேற் கண்ட ஆக்கிரமிப்பு இடங்களில் உள்ள வீடுகள், கட்டிடங்கள், கடைகள், வணிக நிறுவனங்களின் மின் இணைப்புகளை கோவில் பெயருக்கு மாற்றவும் தற்போது மின் இணைப்பு உள்ளவர்கள் பெயர் பட்டி யலை கோவில் நிர்வாகத்திற்கு வழங்குவ தோடு புதிய மின் இணைப்புகள் வழங்கக் கூடாது என நோட்டீஸ் அனுப்பப் பட்டுள் ளது. இதே போல் திருச்சி மாநகராட்சிக் கும் வீட்டு வரி, கட்டிட அனுமதி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை போன்றவை கள் வழங்கக் கூடாது என நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை காரணம் காட்டி அறநிலையத் துறை இணை ஆணையர் ஸ்ரீரங்கம் பகுதி மக்களை அச்சுறுத்துவது கண்டிக்கத் தக்கச் செயலாகும். மேலும் கோயில் நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கை தமிழக அரசின் முடிவா? அல்லது தன்னிச்சையாக ஸ்ரீரங்கம் இணை ஆணையர் செயல் படுகிறாரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தின் பல்வேறு கோயில் இடங்க ளில் குடியிருக்கும் பல லட்சக்கணக்கான மக்களுக்கு குடியிருக்கும் அடி மனை உரிமை வழங்க செய்யப்பட்ட நடவடிக்கை போல், தமிழக அரசு சிறப்பு சட்டத்தை இயற்றிடவும், ஸ்ரீரங்கம் மக்களின் பத்திரப்ப திவு உரிமையை மீட்டெடுத்திட ஒன்றுபடு வோம். இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று (17-ஆம் தேதி) ஸ்ரீரங்கத்தில் நடைபெறுகின்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்பீர்.
-ஆர்.ராஜா
திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)