districts

img

மணிப்பூர் கலவரப் பகுதிகளை பார்வையிட நீதிபதிகள் கொண்ட குழு அமைத்திடுக

திருச்சிராப்பள்ளி, ஜூலை 3-

     அனைத்து திருஅவைகளின் கூட்ட மைப்பு சார்பில் மணிப்பூர் மாநில சம்ப வங்களை கண்டித்து திருச்சி புத்தூர் நால்  ரோடு பகுதியில் ஞாயிறன்று பொதுக் கூட்டம் நடந்தது.  

   கூட்டத்திற்கு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருஅவை பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ்,  சிஎஸ்ஐ பேராயர் சந்திரசேகரன் தலைமை வகித்தனர். கூட்டத்தில் மணிப்பூர் மாநி லத்தில் இன குழுக்களுக்கு இடையில் நடக்கும் மோதல், மதக்கலவரத்தை உட னடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கலவர பகுதிகளை பார்வையிட எம்.பி.,க்கள், நீதிபதிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.  

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ உதவி வழங்க குழுக்கள் அமைக்க வேண்டும் தகர்க்கப்பட்ட சர்ச்சு கள், வீடுகளை மீண்டும் கட்டித்தர வேண் டும். மணிப்பூர் மக்களை பாதுகாக்க தவ றிய ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில அரசு களுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கத்தோலிக்க திருஅவை ஆயர் ஆரோக்கி யராஜ், பவுலின் மேரி, கவிஞர் நந்தலாலா,  சுந்தரம் இயேசுராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;