districts

ஆன்லைன் விற்பனையைத் தடுக்க மோட்டார் உதிரிபாக விற்பனையாளர் கோரிக்கை

கும்பகோணம், மே 16- கும்பகோணத்தில் உள்ள மோட்டார் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்கம், உற்பத் தியாளர்கள் நேரடி விற்பனை மற்றும் ஆன் லைன் விற்பனையைத் தொடங்கியுள்ள தால், மோட்டார் உதிரிபாக சில்லறை வணி கத்தை காப்பாற்ற  வேண்டுமென மாநில- ஒன்றிய அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. கும்பகோணத்தில் நடைபெற்ற சங்கத்தின்  சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில், “ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள் உற்பத்தியாளர்களின் இந்த நட வடிக்கையால் மோட்டார் உதிரிப்பாகங்கள் சில்லறை விற்பனையில் ஈடுபட்டுள்ள வியா பாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இப்பிரச்னையில் மாநில, ஒன்றிய அரசுகள் தலையிட்டு மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் தொழிலை பாது காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”  எனக் கூறப்பட்டுள்ளது.