தேனி:
அரிக்கொம்பன் யானையை பிடிக்க நீலகிரியி லிருந்து பொம்மன் தலைமையிலான பழங்குடியினர் கம்பம் வந்தனர்.
இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தம்பாறை பகுதியில் பலரை காவு வாங்கிய அரிக் கொம்பன் யானை தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்ட பின் கடந்த 27 ஆம் தேதி கம்பம் நகருக்குள் புகுந்தது. சாலைகள் மற்றும் தெருக் களில் நடந்து சென்றவர்களை விரட்டியதுடன் அங்கிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோவையும் சேதப்படுத்தியது. சாலை யில் நடந்து வந்த கம்பத்தைச் சேர்ந்த பால்ராஜ் (65) என்பவரை தாக்கியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
இதனிடையே சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி பகுதிகளில் புகுந்த அரிக் கொம்பன் ராயப்பன்பட்டி சண்முகா நதி அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனைப் பிடிப்பதற்காக அழைத்து வரப்பட்ட 3 கும்கி யானைகள் கம்பம் வனப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். சண்முக நாதன் கோவிலில் புகுந்த அரிக் கொம்பன் அங்கே தங்கி இருந்து கோவிலில் பூஜை செய்து வரும் சரஸ்வதியம்மாள் (63) என்பவரது வீட்டை இடித்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து அவர் கோவிலுக்குள் சென்று கிரில் கேட்டை பூட்டிக்கொண்டார்.
அதன் பிறகு கோவிலுக்கு வந்த யானை அங்கிருந்த சமைய லறை சுவற்றை சேதப் படுத்தி உள்ளே இருந்த பருப்பு, அரிசி, உப்பு ஆகியவற்றை தின்று விட்டு சென்றது. வனத்துறையினர், போலீசார் என 150-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து அரிக்கொம் பனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் தற்போது பாதிக்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பப்பட்டனர். சிறு சிறு குழுக் களாக சுழற்சி முறையில் யானை இருக்கும் இடத்தை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். நீலகிரி முதுமலையை சேர்ந்த பொம்மன், சுரேஷ், சிவா, ஸ்ரீகாந்த் ஆகிய 4 பழங்குடியி னர் கம்பம் வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் அரிக்கொம்பனை அதன் பாணியில் நடந்து வெளியே கொண்டுவர கும்கி யானை களுடன் செல்ல உள்ளனர்.