districts

வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க தொழிலதிபரிடம் ரூ.6 கோடி லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது வழக்கு

தஞ்சாவூர், ஜூன் 25-

     மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர்களிடம், வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க, 6 கோடி ரூபாய்  லஞ்சம் கேட்ட நிலையில், 10 லட்சம் ரூபாயை  முன் பணமாக வாங்கியதாக காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது லஞ்ச  ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப் பதிந்து  விசாரித்து வருகின்றனர்.

   தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் கணேஷ், சுவாமிநாதன். சகோதரர்களான இவர்கள் இருவரும் நிதி நிறுவனம், கிரிஷ் பால்பண்ணை உள்ளிட்ட தொழில்களைச் செய்து வந்தனர். சொந்த  ஹெலிகாப்டரிலேயே வலம் வந்ததால், ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என அழைக்கப் பட்டனர். இவர்கள், தங்கள் நிதி நிறுவனத் தில் முதலீடு செய்தால், இருமடங்காக பணம்  திருப்பி தரப்படும் என கூறி, பலரிடம் கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்தனர்.

   இந்நிலையில், கும்பகோணத்தை சேர்ந்த  ரகுபிரசாத் என்பவர் நிதி நிறுவனத்தில் செலுத்திய பணம் ரூ.2.50 கோடி மற்றும் சீனி வாசன் என்பவரின் ரூ.38 லட்சம் பணத்தை கணேஷ், சுவாமிநாதன் தர மறுப்பதாக, தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளரிடம் புகார் அளித்தனர். இது தொடர் பான விசாரணையில், கணேஷ், சுவாமி நாதன் பலகோடி ரூபாய் மோசடி செய்திருப் பது தெரிய வந்தது.

    அதன் பின்னர், கணேஷ், சுவாமிநாதன் தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த சூழலில், கணேஷ் அங்கு தனியார்  தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்.17  அன்று தங்கும் விடுதிக்கு சென்ற, பூதலூர்  காவல் உதவி ஆய்வாளராக இருந்த கண்ணன், 2.58 கோடி ரூபாய் குறித்து விசா ரிக்க வந்து இருப்பதாக கூறியுள்ளார்.  

    பின்னர் மறுநாள் (ஏப்.18) அப்போது சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளராக இருந்த  சோமசுந்தரம், உதவி ஆய்வாளர் கண்ணன்  இருவரும், தங்கும் விடுதியில் இருந்த கணேஷை சந்தித்து, இரண்டு புகார்கள் தொடர்பாகவும், இனி வரும் புகார்கள் தொடர் பாக வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் 6  கோடி ரூபாய் கேட்டதாக கூறியுள்ளனர்.

   மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் முதல் தவணையாக ரூ.10 லட்சம் கேட்ப தாக சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். அப்போது கணேஷ், ஏப்.19 அன்று தஞ்சா வூர் நிறுவனத்தில் பணியாற்றும் பொது மேலாளர் ஸ்ரீகாந்த் மூலம் தருவதாக கூறியுள் ளார். இருப்பினும் சோமசுந்தரம் அங்கிருந்து  புறப்பட்ட நிலையில், கண்ணன் ஊட்டியில் கணேஷ் தங்கி இருந்த விடுதியில் இரண்டு  காவலர்களை கொண்டு, அவர் எங்கும் சென்று விடாதபடி கண்காணிக்க கூறியுள் ளார்.  

   தொடர்ந்து ஏப்.19 அன்று, தஞ்சாவூரில் ஸ்ரீகாந்த் மூலம் 5 லட்சம் ரூபாய் பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம்  அலுவலகம் எதிரே சோமசுந்தரம் பெற்றுள் ளார். அதன் பிறகு ஏப்.20 அன்று கண்ணன், கணேஷை சந்தித்து பணத்தை பெற்றுக் கொண்டதாக கூறிவிட்டு புறப்பட்டுள்ளார். பிறகு ஏப்.29 அன்று மீதமுள்ள 5 லட்சம் ரூபாயை சோமசுந்தரம், கண்ணன் இரு வரும் ஸ்ரீகாந்த் மூலம் பெற்றுள்ளனர்.  

   இந்த மோசடி வழக்கில் கணேஷ், சுவாமி நாதன், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட போது, சோமசுந்தரம், கண்ணன்  ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் பெயரைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கி யது தெரியவந்தது. இதற்கான ஆதாரங்கள்  இருந்ததால், லஞ்ச ஒழிப்பு துறையினர் சோம சுந்தரம், கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.  

   இவ்வழக்கு தொடர்பாக தற்போது மயி லாடுதுறை சிறப்பு காவல்துறை தனிப்படை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சோம சுந்தரம் பந்தநல்லூர் காவல் ஆய்வாளராக வும், கண்ணன் திருவாரூரிலும் பணியாற்றி வருகின்றனர்.