மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சங்கரன்பந்தல் அருகேயுள்ள விசலூர் கிராமத்தையும் சேந்தமங்கலம் பகுதியையும் இணைக்கும் கிராம சாலையின் குறுக்கே ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.