மயிலாடுதுறை, செப்.2 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடி வட்டம், விளாகம் ஊராட்சி, காரு குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக பள்ளிக்குத் தேவை யான ஃபேன், நாற்காலிகள், கூடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கிராம மக்கள், பெற்றோர்கள் மேளம், நாதஸ்வர கச்சேரியுடன் சீர்வரிசை யாக எடுத்து வந்து பள்ளியில் அளித்தனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டத்தை ஒரு திரு விழா போன்று நடத்தியது மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.