திருச்சிராப்பள்ளி, ஜன,4- திருச்சிராப்பள்ளி மாவட் டம், திருவெறும்பூர் தொகு திக்குட்பட்ட திருவளர்ச்சிப் பட்டியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட துணை சுகா தார நிலையம், அய்யன் புதூர் கிராமத்தில் நெசவா ளர் காலனிக்கு 2 கி.மீ. புதிய தார்ச்சாலை, சூரியூரில் புதிய துணை சுகாதார நிலையம், சோழமாதேவி யில் சமுதாயக் கூடம், நவல் பட்டு ஊராட்சியில் உய்யக் கொண்டான் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் என ரூ.3.85 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதை மக்கள் பயன்பாட்டுக்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி அர்ப்பணித்து வைத் தார். மக்களின் தேவைகளை அறிந்து தொகுதிக்கான அனைத்துப் பணிகளும் நிறைவேற்றித்தரப்படும் என்று அமைச்சர் தெரி வித்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, திருவெறும்பூர் ஒன்றிய குழுத் தலைவர் சத்யா கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமி திருமுருகன், சண்முக சுந்தரம் மற்றும் மக்கள் பிரதி நிதிகள், அரசு அலுவலர் கள் என பலர் கலந்து கொண்டனர்.