தஞ்சாவூர், மே 31-
தஞ்சாவூர் மாவட்டம் பூத லூர் வடக்கு ஒன்றியம் மைக் கேல்பட்டியில், பாசன வாய்க்கால் அருகே இருந்த விளைநிலங்கள், மனைக் கட்டுகளாக மாற்றப்பட்டு, பாசன வாய்க்கால், தூர்வா ரப்படாமல், கடந்த பல வரு டங்களாக ஆக்கிரமிப்பில் இருந்தது.
எனவே, பாசன வாய்க் காலை மீட்டெடுக்க வேண் டும், கரையை பலப்படுத்தி தரவேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில், பல கட்ட போராட்டங் கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில். வாய்க் காலை அகலப்படுத்தி சாலை போடும் பணிகளில் அதிகாரி கள் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே.காந்தி, பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ் மற்றும் கிளைச் செயலாளர் குமார் ஆகியோர், வட்டார வளர்ச்சி அலுவலரைச் சந் தித்து, ‘‘பாசன வாய்க்காலை பாதுகாக்க வேண்டும். ஆக் கிரமிப்பு அகற்றி தூர்வாரித் தரவேண்டும்’’ என வலி யுறுத்திப் பேசினர்.
இதன் தொடர்ச்சியாக பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளரை சந்தித்து சிபிஎம் நிர்வாகிகள் பேசி னர். இதன்பேரில், ‘‘வாய்க் கால் தூர்வாரி தரப்படும். வாய்க்காலுக்கு கரை அமைத்து தரப்படும், மீத முள்ள பகுதியில் சாலை அமைக்க ஏற்பாடு செய்யப் படும்’’ என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து புதன் கிழமை அலுவலர்கள் வாய்க்காலை தூர்வாரி, இருபுறமும் கரை அமைக் கம் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே.காந்தி, ஒன்றி யச் செயலாளர் ரமேஷ், கிளைச் செயலாளர் குமார் மற்றும் கிளைத் தோழர்கள் பார்வையிட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பூதலூர் வடக்கு ஒன்றியக் குழுவின் முயற்சி யால், பாசன வாய்க்கால் கரைகள் ஆக்கிரமிப்பு செய் யப்படுவது தடுத்து நிறுத்தப் பட்டு, பாசன வாய்க்காலும் தூர்வாரப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.