கும்பகோணம், மார்ச் 9- கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியின் பிரதான நுழைவா யிலை உடனே திறக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியின் கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.தமிழ ரசன் தலைமை வகித்தார். கிளை உறுப்பினர் பரசுராமன் சங்க கொடியை ஏற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராகுல் வரவேற்றார். மாவட்டத் தலைவர் அர்ஜுன் துவக்க உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் அமுல் காஸ்ட்ரோ, மாநில துணைத் தலைவர் ஆனந்த் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டச் செயலாளர் சந்துரு நிறை வுரை ஆற்றினார். மூடியிருக்கும் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியின் பிரதான நுழைவாயிலை மாணவரின் நலன் கருதி உடனடியாக திறக்க வேண்டும். ஐசிசி என்ற பெண்கள் பாது காப்பு குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் புகார் பெட்டி அமைக்க வேண்டும். நாப்கின்கள் பெறப்படும் மற்றும் எரியூட்டும் நவீன கருவியை துறைதோறும் அமைக்க வேண்டும். கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கான ஓய்வறையை அமைத்திட வேண்டும். கல்லூரி விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அனைத்துத் துறை வகுப்பு களிலும் மின் விளக்குகள், மின் விசிறிகள், மேசைகளை அதிகப்படுத் திடவும் அறிவியல் துறையில் உள்ள ஆய்வகத்தை மேம்படுத்தி, ஆய்வக கருவிகள் இருப்பதை உறுதிப்படுத்த வும் வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய கிளைத் தலைவ ராக பரசுராமன், துணைத் தலைவ ராக ஜேம்ஸ், சுதன், ரகு, காயத்ரி, கிளைச் செயலாளராக கோபி, துணைச் செயலாளராக சீதா, ரவிவர்மா, ராகுல், சூரியகுமாரி உள்ளிட்ட 25 பேர் கொண்ட உபகுழு தேர்வு செய்யப் பட்டது.