districts

img

கருகிக் கொண்டிருக்கும் சம்பா பயிர்கள் கண்ணீருடன் முறையிட்ட விவசாயிகள்

மயிலாடுதுறை, அக்.8 - மயிலாடுதுறை மாவட்டம் செம்ப னார்கோவில் ஒன்றிய பகுதிகளில் தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் ஆகிய இரு சங்கங் களின் சந்தா பதிவு நடைபெற்றது. இதற்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் வீ.எம்.சரவணன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம்.முருகையன் கலந்து கொண்டார். இந்நிலையில், விவசாயிகள் சந்தா பதிவுக்கு சென்ற சங்கத்தினரிடம், கிடங்கல்,  மருதம்பள்ளம், காலமநல்லூர், சங்கேந்தி, குமாரக்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு காவிரி நீர் வராததாலும், மழைப் பெய்யாத தாலும் சம்பா பருவத்திற்காக செய்யப்பட்ட நேரடி நெல் விதைப்பு முற்றிலும் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீர் மல்க கூறினர்.  இதேநிலை நீடித்தால் விவசாயத்தை முற்றிலும் கைவிடுவதை தவிர வேறு வழி யில்லை என்றும் கூறினர்.