districts

img

புதுக்கோட்டையில் பன்முக கலாச்சார போட்டிகள் ஆட்சியர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை, பிப்.2 - தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மாவட்ட அளவிலான பன்முக கலாச்சார போட்டிகளை, புதுக் கோட்டை மாவட்ட ஆட்சிர் மு.அருணா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். கபாடி, கோலப்போட்டி, கயிறு இழுத்தல் போட்டி, கோ-கோ போட்டி, கால்பந்து போட்டிகள் துவக்கி வைக்கப் பட்டன. இப்போட்டிகளில் அனைத்து வட்டார மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டி யில் பங்குபெற உள்ளனர்.  இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கே.ஸ்ருதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்  அலுவலர் து.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.