புதுக்கோட்டை நவ.2- புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளத்தில் சிறு விளை யாட்டு அரங்கத்திற்கு காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமையன்று அடிக்கல் நாட்டினார். மாணவர்களின் விளை யாட்டுச் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், விளையாட்டரங்கத்தினை விரிவு படுத்தும் நோக்கத்துடனும், தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சிறு விளையாட்டரங்கம் அமைக்கப் படும் என சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் (2021-2022), அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் 10 சட்ட மன்றத் தொகுதிகளில் முதலமைச் சர் சிறு விளையாட்டரங்கள் அமைப் பதற்கான கட்டிடப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயி லாக வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார். அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம், திரு வரங்குளத்தில் சிறு விளையாட்ட ரங்க கட்டுமான பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். விளையாட்டுத்திடல் அமைய உள்ள இடத்தில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, ஒன்றியக்குழுத் வள்ளி யம்மை தங்கமணி, மாவட்ட விளை யாட்டு அலுவலர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆஷாராணி, கோகுலகிருஷ்ணன், வட்டாட்சியர் பெரியநாயகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கமானது 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.3.கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இதில் தடகள ஓடுபாதை, கால்பந்து மைதானம், கையுந்து பந்து மைதானம், கூடைபந்து மைதானம், கோ-கோ மைதானம், கபாடி மைதானம், காலரி, ஸ்டோர் அறை, அலுவலக அறை, உடை மாற்றும் அறை மற்றும் கழிவறை என எழிலுற அமையப்பெற உள்ளது.