districts

பணி நீக்கம் செய்யப்பட்ட 3 ஊழியர்களுக்கு சிஐடியு முயற்சியால் மீண்டும் வேலை கிடைத்தது

கரூர், அக்.8 - பள்ளப்பட்டி நகராட்சி யில் பணிநீக்கம் செய்யப் பட்ட மூன்று ஊழியர் களுக்கு, சிஐடியு முயற்சி யால் மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் பள்ளப் பட்டி பேரூராட்சியாக இருந்த போது, 2005 ஆம்  ஆண்டிலிருந்து 480 நாட் களுக்கு மேல் தொடர்ந்து பணிபுரிந்த 19 தற்காலிகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்  என கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம்  (சிஐடியு) சார்பில் தொழி லாளர் உதவியாளர் ஆணையர் (அமலாக்கம்) முன்பு 2015 ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது.  கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த  வழக்கில், வழக்கு தொடர்ந்த  19 பேரையும், முன் தேதி யிட்டு பணி நிரந்தரம் செய்ய  28.8.23 அன்று உத்தரவிடப் பட்டது. இந்த உத்தரவு வந்தபோது, வழக்குத் தொடர்ந்த 19 பேரில்  தாயம்மாள், மணியம்மாள், பூங்கொடி ஆகிய 3 பேர் ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இந்தப் பின்னணியில், கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை  சங்கத்தின் சார்பாக  பள்ளப்பட்டி நகராட்சி ஆணையரை சந்தித்து  தொடர்ந்து முறையிடப்பட் டது. அதன் அடிப்படை யில், தற்போது இந்த மூன்று பேரும் 8.10.23 முதல்  பணியில் சேர்க்கப்பட்டுள் ளனர். பணி நிரந்தரத்திற்கான உத்தரவு வந்தும், பணி நீக்கம் செய்யப்பட்டிருந் ததால் தங்களுக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டு விட்டதோ என அச்சத்தில் இருந்த மூன்று தொழிலா ளர்களுக்கும், சிஐடியு  சங்கத்தின் முயற்சியால் மீண்டும் பணி வழங்கப் பட்டது. இதனால் ஊழி யர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையில், பணி  நிரந்தரம் செய்யச் சொல்லி  நீதிமன்ற உத்தரவு வந்தும்,  ஒரு மாதம் ஆகியும் யாரும் இன்னும் பணி  நிரந்தரம் செய்யப்பட வில்லை. இந்நிலையில், இவர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய சங்கத்தின் சார்பில் நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண உதவிய பள்ளப்பட்டி நக ராட்சி ஆணையருக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.