தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை புதிய வருவாய் கோட்டாட்சியராக ஜெயஸ்ரீ பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை ஆட்சியர் பயிற்சி முடித்தவர். இதற்கு முன் இங்கு வருவாய் கோட்டாட்சியராக இருந்த அக்பர் அலி, நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியராக பணி மாறுதலில் சென்றுள்ளார்.