தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ராணிப்பேட்டையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமையிலும், வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலும் புதனன்று (ஆக. 21) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வினோத்குமார், பொருளாளர் பெருமாள், மாநில அமைப்பாளர் செங்கதிர்செல்வன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.